மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகி வீட்டு காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மியான்மர் தலைநகர் நேபிடாவில் ஆங் சான் சூகி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மியான்மரில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி ராணுவம் ஆட்சியை கலைத்தது. இதை அடுத்து பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த செப்டம்பரில் அவருடைய உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. அவர் தொடர்பான தகவல்களை ராணுவம் ரகசியமாக வைத்திருக்கிறது. தற்போது அவர் வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
தற்போது மியான்மரில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில், வயது முதிர்ந்த காரணத்தால் உடல் நலன் கருதி வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சாவ்மின் கூறியுள்ளார்.