மியான்மர் - ஆட்சிக் கவிழ்ப்பு நினைவு தினத்தை முன்னிட்டு மௌன போராட்டம்

February 2, 2023

மியான்மரில் ஜனநாயக அரசு கலைக்கப்பட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், புதன்கிழமை அன்று, ஆட்சி கவிழ்க்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, ஜனநாயக ஆதரவாளர்கள் மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ ஆட்சியை கண்டித்தும், மீண்டும் ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்தியும், 'பொது வேலை நிறுத்த ஒருங்கிணைப்பு குழு' மௌன போராட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உள்ளிருப்புப் […]

மியான்மரில் ஜனநாயக அரசு கலைக்கப்பட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், புதன்கிழமை அன்று, ஆட்சி கவிழ்க்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, ஜனநாயக ஆதரவாளர்கள் மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவ ஆட்சியை கண்டித்தும், மீண்டும் ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்தியும், 'பொது வேலை நிறுத்த ஒருங்கிணைப்பு குழு' மௌன போராட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்படி, புதன்கிழமை அன்று, யங்கூன் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மியான்மரில், ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்ததற்கு, கடந்த 2 ஆண்டுகளாகவே அமைதியான முறையில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சில கிராமப்புறங்களில் அமைதிப் போராட்டங்கள் வன்முறையாக மாறி வருவதும் அரங்கேறி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu