நாகை மற்றும் இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்

November 15, 2024

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை வானிலை காரணமாக நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தப்படுகிறது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே, சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், குறைந்த பயணிகளால் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் சேவை அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், நவம்பர் 8 முதல் வாரத்தில் 5 நாட்களுக்கு கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 நவம்பர் முதல் […]

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை வானிலை காரணமாக நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தப்படுகிறது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே, சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், குறைந்த பயணிகளால் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டும் சேவை அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், நவம்பர் 8 முதல் வாரத்தில் 5 நாட்களுக்கு கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19 நவம்பர் முதல் 18 டிசம்பர் வரை, வானிலை காரணமாக இந்த கப்பல் சேவை இடை நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 15, 16, 17, 18 நவம்பர் ஆகிய நாட்களில் கப்பல் இயக்கப்படும், அதன்பிறகு சேவை மீண்டும் 18 டிசம்பர் பிறகு தொடங்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu