இல. கணேசன் மறைவுக்கு பின் நாகாலாந்து கவர்னர் பதவியை மணிப்பூர் கவர்னர் ஏற்கிறார்.
நாகாலாந்து கவர்னராக இருந்த இல. கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். பின்னர், சென்னையில் அவரது உடல் 42 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை அறிவிப்பின் படி, மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா, கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் ஏற்க உள்ளார். இதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் ஒரே கவர்னராக பல்லா செயல்படுகிறார்.