மஞ்சள் எச்சரிக்கையால் நாகப்பட்டினம்–காங்கேசன் துறை பயணிகள் கப்பல் சேவை ஜூன் 14 முதல் 18 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூன் 14 முதல் 16 வரை தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூன் 14 முதல் 18 வரை இந்த கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.