அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் "அயோத்தி தாம்" என மற்றபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படுவதாக எம்.பி லாலு சிங் தெரிவித்திருந்தார். அதில் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி அயோத்தி ரயில் நிலையம் அயோத்தி தாம் என்று மாற்றப்படுகிறது என தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் மாதம் ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார். இந்த ரயில் நிலையத்தில் 12 லிஃப்டுகள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை என பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.