செவ்வாய் கிரக சூழலில் வசிக்க மனிதர்களை பணியமர்த்தும் நாசா

February 20, 2024

செவ்வாய் கிரகத்தில் உள்ள சுற்றுச்சூழலை போலவே பூமியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செவ்வாய் கிரக வாழ் இடத்தில் ஒரு வருட காலத்திற்கு வசிப்பதற்கு 4 பேரை நாசா பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆள் தேடும் விளம்பரம் Crew Health and Performance Exploration Analog (CHAPEA) இல் வெளியாகி உள்ளது. மார்ஸ் டியூன் ஆல்ஃபா என்ற பெயரில் செவ்வாய் கிரக வாழ்விடம் 1700 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மனிதர்களை தங்க வைத்து அவர்களிடம் உடலளவில் […]

செவ்வாய் கிரகத்தில் உள்ள சுற்றுச்சூழலை போலவே பூமியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செவ்வாய் கிரக வாழ் இடத்தில் ஒரு வருட காலத்திற்கு வசிப்பதற்கு 4 பேரை நாசா பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆள் தேடும் விளம்பரம் Crew Health and Performance Exploration Analog (CHAPEA) இல் வெளியாகி உள்ளது.

மார்ஸ் டியூன் ஆல்ஃபா என்ற பெயரில் செவ்வாய் கிரக வாழ்விடம் 1700 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மனிதர்களை தங்க வைத்து அவர்களிடம் உடலளவில் மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இதற்கு 4 மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கான முக்கிய தகுதி 30 முதல் 55 வயதுக்கு உட்பட்ட அமெரிக்கர்களாக இருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் புகைப்பழக்கம் இல்லாதவர்களாக இருத்தல் அவசியம். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இருக்கக்கூடாது. முக்கியமாக, STEM தரத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து, 1000 மணி நேரங்கள் விமானியாக பணி செய்தவராகவோ , ராணுவ பயிற்சி முடித்தவராகவோ இருக்க வேண்டும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu