இன்று பூமியை நெருங்கி வரும் இரண்டு சிறுகோள்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவற்றில், 2024 TE என்ற சிறுகோள் ஒரு பேருந்தின் அளவில் இருக்கும். இது பூமியிலிருந்து 1.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாக கடந்து செல்லும். அதேபோல், 2024 SD3 என்ற மற்றொரு சிறுகோள் ஒரு விமானத்தின் அளவில் இருக்கும். இது பூமியிலிருந்து 1.49 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும்.
நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு திட்டத்தின்படி, 7.5 மில்லியன் கிலோமீட்டருக்குள் வரும் 150 மீட்டருக்கும் அதிகமான சிறுகோள்கள் பூமிக்கு ஆபத்தாக கருதப்படுகின்றன. அந்த வகையில், இந்த 2 சிறுகோள்களும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.