நாசா விண்வெளி வீரர்களான ஜோஷ் காசண்டா மற்றும் பிராங்க் ரூபியோ ஆகியவர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில், வெற்றிகரமாக சோலார் அரேயை பொருத்தி உள்ளனர். இது குறித்த காணொளியை நாசா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சுமார் 7 மணி நேரத்திற்கு விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர்கள், வெற்றிகரமாக திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சோலார் அரேயை பொருத்தியதுடன் விண்வெளி நிலையத்தின் கேபிள் இணைப்பையும் வெற்றிகரமாக துண்டித்துள்ளனர். காலை 7:25 மணிக்கு தொடங்கி மதியம் 2:21 மணி வரை இந்த செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இது இரு விண்வெளி வீரர்களுக்கும் இரண்டாவது விண்வெளி நடைபயணம் என நாசா தெரிவித்துள்ளது.