வரும் 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி, அபோபிஸ் என்ற விண்கல், பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரவுள்ளது. இது ‘காட் ஆப் சாவோஸ்’ (God of Chaos) என்று அழைக்கப்படுகிறது. இந்த விண்கல்லை ஆய்வு செய்வதற்காக, நாசா புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
வரும் 2029 ஆம் ஆண்டு, பூமியில் இருந்து வெறும் 20000 மைல் தொலைவில் அபோபிஸ் விண்கல் வரவுள்ளது. இது செயற்கைக்கோள்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு மிகவும் நெருக்கமாகும். மேலும், பூமியின் கிழக்கு பகுதியில் இருந்து எளிதில் காணக்கூடிய வகையில் இது வரவுள்ளது. கிட்டத்தட்ட 7500 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது பூமிக்கு நெருக்கமாக வரும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த முறை, பூமிக்கு நெருக்கமாக விண்கல் வரும் போது, புவியீர்ப்பு விசையினால் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிய, நாசா புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே பென்னு சிறு கோளிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த ஒசிரிஸ் அபெக்ஸ் விண்கலம், அபோபிஸ் விண்கல்லை ஆய்வு செய்ய அனுப்பப்பட உள்ளதாக நாசா கூறியுள்ளது.