கடந்த 17 ஆண்டுகளாக நாசாவின் கலிப்சோ திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிறைவு பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. கலிப்சோ திட்டத்தின் படி, செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த செயற்கைக்கோள், 10 பில்லியனுக்கும் மேற்பட்ட தரவுகளை கொடுத்துள்ளது. குறிப்பாக, காலநிலை, வானிலை, காற்று குறியீட்டு எண்கள் போன்றவற்றை இந்த செயற்கைக்கோள் வழங்குகிறது. லேசர் ஒளியை பூமியில் செலுத்தி, அதன் வழியாக இது அளவீடுகளை கணிக்கிறது. நாசா மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தின. இந்த செயற்கைக்கோள் தரவுகள் மூலம், எண்ணற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனது பணியை சிறப்பாக மேற்கொண்ட இந்த செயற்கைக்கோள், தற்போது ஓய்வு பெற்றுள்ளது. எனவே, இது, பூமியின் மீது லேசர் ஒளிகளை இனிமேல் செலுத்தாது என நாசா கூறியுள்ளது.