நாசாவின் கேப்ஸ்டோன் விண்கலம் சமீபத்தில் சந்திரனை 100 வது முறை வெற்றிகரமாகச் சுற்றி வந்துள்ளது. இதையடுத்து, இந்த விண்கலத்தின் பணி டிசம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள், தன்னாட்சி வழிசெலுத்தல் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நிரூபித்து வருவைத்து குறிப்பிடத்தக்கது.
கேப்ஸ்டோன் விண்கலம், சந்திரனின் சுற்றுப்பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடம், நாசாவின் எதிர்கால நிலவுத் திட்டமான ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் கட்டப்படவிருக்கும் விண்வெளி நிலையத்திற்கு மிகவும் பொருத்தமானது. கேப்ஸ்டோன் விண்கலம், இந்த இடத்தை ஆய்வு செய்து, எதிர்கால விண்வெளி நிலையத்திற்கான தகவல்களைச் சேகரித்து வருகிறது. மேலும், இந்த விண்கலம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றைக் கண்டறிந்து சரி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அத்துடன், நாசாவின் மற்றொரு விண்கலமான லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (LRO) உடன் இணைந்து செயல்பட்டு, தரவுகளை பரிமாறி வருகிறது.