பூமியிலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியைப் போலவே வாழத் தகுந்த சூழல் கொண்ட மற்றொரு கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கிரகம் சூப்பர் எர்த் என அழைக்கப்படுகிறது. ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கிரகத்துக்கு TOI-715b என பெயரிடப்பட்டுள்ளது.
பூமியை போல 1.5 மடங்கு அகலம் கொண்டதாக இந்த கிரகம் அறியப்படுகிறது. இதில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது வெறும் 19 நாட்கள் என கூறப்படுகிறது. இந்த கிரகத்துக்குள் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் நிச்சயமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.