கொதிக்கும் கடல் உள்ள புறக்கோள் - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடிப்பு

பூமியைத் தவிர வேறு எந்தெந்த கோள்களில் தண்ணீர் உள்ளது என்ற தேடுதல் வேட்டையில் நாசா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், புறக்கோள் ஒன்றில் கொதிக்கும் நிலையில் தண்ணீர் கடல் போல உள்ளதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியிலிருந்து 70 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியை விட இரு மடங்கு விட்டம் கொண்ட புறக்கோள் ஒன்று உள்ளது. இந்த கோளில், மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் உள்ளன. அத்துடன், இந்தக் கோளின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் […]

பூமியைத் தவிர வேறு எந்தெந்த கோள்களில் தண்ணீர் உள்ளது என்ற தேடுதல் வேட்டையில் நாசா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், புறக்கோள் ஒன்றில் கொதிக்கும் நிலையில் தண்ணீர் கடல் போல உள்ளதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.

பூமியிலிருந்து 70 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியை விட இரு மடங்கு விட்டம் கொண்ட புறக்கோள் ஒன்று உள்ளது. இந்த கோளில், மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் உள்ளன. அத்துடன், இந்தக் கோளின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நிரம்பியுள்ளது. அங்குள்ள கடல்களில் கிட்டத்தட்ட 100 டிகிரி செல்சியஸ் வரை கொதி நிலையில் தண்ணீர் உள்ளது. அங்குள்ள வளிமண்டல சூழல்களால், அது திரவ நிலையில் உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கோள் Hycean என்று அழைக்கப்படலாம் என ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் நிக்கு மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu