அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஆகியவை இணைந்து NISAR (NASA-ISRO SAR Mission) திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. பூமியின் மாறிவரும் நில அமைப்புகள் மற்றும் இயற்கை வளங்கள் குறித்த விரிவான தகவல்களை சேகரிப்பதே NISAR திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். NISAR திட்டத்துக்காக கலிபோர்னியாவில் ரேடார் ஆண்டபிரதிபலிப்பான் னா உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து, பிரதிபலிப்பான் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த நிலையில், சூரிய ஒளி மற்றும் நிழலின் தாக்கம், செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை மற்றும் பொருத்தமான ஏவுகணை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகிய காரணங்களால், இந்த செயற்கைக்கோள் 2025 பிப்ரவரியில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.