அதி தீவிர சூரிய புயல் ஒன்று ஏப்ரல் 19 மற்றும் 20 ம் தேதிகளில் பூமியை தாக்க உள்ளதாக நாசா கணித்துள்ளது. மேலும், இதுவரை தாக்கிய சூரிய புயல்களை விட, இது கடுமையாக இருக்கும் எனவும், இதன் பாதிப்பு அபாயகரமானதாக இருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளது. பூமியின் துருவப் பகுதிகளில் ஆரோரா தென்படும் எனவும், துருவப் பகுதிகளை தாண்டியும் ஆரோராக்கள் தென்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் காந்தப்புலத்தில் துளையிட்டு, சூரிய கதிர்கள் நூழையும் வகையில் அதிதீவிரமாக இந்த புயல் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. சூரிய புயலின் தாக்கத்தை பொறுத்து, ஜிபிஎஸ் சேவைகள் பாதிப்பு, தகவல் தொலைத்தொடர்பு இணைப்புகள் பாதிப்பு மற்றும் மின்னணு சாதனங்கள் செயலிழப்பு உள்ளிட்டவை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.