அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு சார்ந்த ஆராய்ச்சி மையம் DARPA ஆகியவை இணைந்து, விண்வெளி துறையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் களமிறங்கி உள்ளன. செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தி ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. வரும் 2027 ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அணுசக்தி ராக்கெட் தயாரிப்புக்காக Lockheed Martin நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு DRACO என பெயரிடப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம் Demonstration Rocket for Agile Cislunar Operations என்பதாகும். அணுசக்தி ராக்கெட்டுகள் தற்போதைய ரசாயன மற்றும் நவீன ராக்கெட்களை விட இரு மடங்கு செயல்திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், விண்வெளி பயணத்தில் இது முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.