நாசா மற்றும் இஸ்ரோ ஆகியவை இணைந்து நிசார் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு 12 நாட்களிலும் பூமியின் வரைபடம் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது.
நிசார் திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சில பரிசோதனைகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு 12 நாட்களிலும் பூமியின் நில அளவீடுகள் கணக்கிடப்பட உள்ளன. இது பல்வேறு ஆய்வுகளுக்கு துணை புரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இயற்கை பேரிடர் சார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் என கருதப்படுகிறது.