இன்று பூமிக்கு மிக நெருக்கமாக விண்கல் ஒன்று வர உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 8 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்குள் வரும் விண்வெளி பொருட்கள் பூமிக்கு ஆபத்து விளைவிப்பையாக கருதப்படுகின்றன. அது குறித்து நாசாவின் கோள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுக்கும். அதன்படி, இன்று பூமியை நெருங்கும் ஆஸ்ட்ராய்டு 2023 பிசி 8 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல்லுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த விண்கல், மணிக்கு 50564 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூமியிலிருந்து 5.9 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில், இந்த விண்கல் பூமியை கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விண்கல்லின் அளவு 160 அடிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் அளவு மற்றும் கடக்கும் தூரம் ஆகியவை அபாயகரமாக உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.