காலநிலை மாற்றத்தை கண்காணிக்க செயற்கைக்கோள் திட்டம் ஒன்றை நாசா செயல்படுத்தி உள்ளது. Plankton, Aerosol, Climate, ocean Ecosystem satellite - PACE (பேஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் மோசமான வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை இது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் பேஸ் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கணவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் உயரத்தில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோளின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததைப் போலவே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.