பூமியின் நீர்நிலைகளை ஆராய செயற்கைக்கோள் அனுப்பிய நாசா

December 17, 2022

பூமியில் உள்ள நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்ய, நேற்று, SWOT செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவி உள்ளது. நாசா மற்றும் பிரான்ஸ் விண்வெளி அமைப்பான CNES ஆகியவை இணைந்து, இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சர்பேஸ் வாட்டர் மற்றும் ஓசன் டோப்போகிராபி செயற்கைக்கோள் நேற்று கலிபோர்னியாவில் இருந்து ஏவப்பட்டது. பூமியிலிருந்து 890 கிலோ மீட்டர் உயரத்தில், இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், 6 மாத காலத்திற்கு, அறிவியல் சார்ந்த தரவுகளை சேகரிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. […]

பூமியில் உள்ள நீர் நிலைகள் குறித்து ஆராய்ச்சி செய்ய, நேற்று, SWOT செயற்கைக்கோளை நாசா விண்ணில் ஏவி உள்ளது.

நாசா மற்றும் பிரான்ஸ் விண்வெளி அமைப்பான CNES ஆகியவை இணைந்து, இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சர்பேஸ் வாட்டர் மற்றும் ஓசன் டோப்போகிராபி செயற்கைக்கோள் நேற்று கலிபோர்னியாவில் இருந்து ஏவப்பட்டது. பூமியிலிருந்து 890 கிலோ மீட்டர் உயரத்தில், இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள், 6 மாத காலத்திற்கு, அறிவியல் சார்ந்த தரவுகளை சேகரிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. பூமியின் நீரோட்டம் குறித்து, இந்த செயற்கைக்கோள் அதிக தரவுகளை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் மூலம், வெள்ளம், மழை போன்ற பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, சேதங்களை தவிர்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், "வறட்சியான பகுதிகளில் நீரை பாதுகாத்து சேமிக்கவும் செயற்கைக்கோள் தரவுகள் பயன்படும். தற்போதைய நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக அழிவுகளை இந்த செயற்கைக்கோள் தரவுகள் மூலம் அறிந்து, பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 320

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu