பூமிக்கு அருகில் உள்ள விண்கற்களை கண்டறிய, நியோ சர்வேயர் என்ற திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நியோ சர்வேயர் திட்டம் குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நாசா பதிவிட்டுள்ளது. அதில், இந்த திட்டத்தின் மூலம், பிரத்தியேக இன்ப்ராரெட் விண்வெளி தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பூமிக்கு அருகில் உள்ள விண்கற்களை கண்டறிய முடியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளது. வரும் 2028 ஜூன் மாதத்திற்குள் இந்த திட்டம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், 90% அபாயகரமான விண்கற்கள் கண்டறியப்படும் என கருதப்படுகிறது. பூமியிலிருந்து 30 மில்லியன் மைல் தொலைவுக்கு வரும் விண்கற்கள் இந்த தொலைநோக்கியின் மூலம் அடையாளம் காணப்படும் என நாசா தெரிவித்துள்ளது.