நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெள்ளிக்கிழமை நிலைநிறுத்தப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
நிலவிலிருந்து 40,000 மைல் தொலைவில் ஓரியன் விண்கலம் சுற்றுவட்ட பாதையில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வார காலத்திற்கு நிலவைச் சுற்றி அரை சுற்றுவட்ட பாதையில் ஓரியன் விண்கலம் இருக்கும் என்றும், அதன் பின்னர், நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து வெளியேறி, பூமிக்கு திரும்பும் என்றும், நாசா தெரிவித்துள்ளது. சுமார் 25 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின்னர், டிசம்பர் 11ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் ஓரியன் விண்கலம் தரையிறங்கும் என நாசா கணித்துள்ளது. ஓரியன் விண்கலத்தின் பாதுகாப்பான தரையிறக்கத்தைப் பொறுத்து, ஆர்டெமிஸ் 2 மற்றும் ஆர்டெமிஸ் 3 திட்டங்களின் செயல்பாடுகள் வகுக்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.