நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் இரு முறை தோல்வி அடைந்தது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 3ம் தேதிகளின் ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு ஆர்டெமிஸ் 1 ராக்கெட் இம்மாத இறுதியில் ஏவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் 23ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதிகளை தேர்ந்தெடுத்து, அதற்கான ஒப்புதல்களை பெற விண்ணப்பித்திருப்பதாக நாசாவின் உயர் அதிகாரி ஜிம் ப்ரீ தெரிவித்துள்ளார்.
திரவ ஹைட்ரஜன் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஆர்டெமிஸ் 1 மிஷன் இரு முறை தடைப்பட்டது. தற்போது, இந்த குழாய்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக நாசா அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தொழில்நுட்ப ரீதியில், அனைத்து அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, வரும் செப்டம்பர் 23ஆம் தேதி அதிகாலை 6:47 மணிக்கு ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கால திட்டம் ஆததால் அக்டோபர் 18ம் தேதியுடன் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 27ஆம் தேதி காலை 11:37 மணிக்கு மற்றொரு ஆர்டெமிஸ் ராக்கெட் கவுண்ட் டவுன் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது நவம்பர் 5ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.