செவ்வாய் கிரக இன்ஜென்யூனிட்டி ஹெலிகாப்டர் உடன் 63 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடர்பு - நாசா

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர், தனது 52 வது பறக்கும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, செவ்வாய் கிரக மண்ணில் தரையிறங்கிய ஹெலிகாப்டரை, நாசாவால் மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பர்சீவரென்ஸ் ரோவர் மூலம், இன்ஜினியூட்டி ஹெலிகாப்டரை தொடர்பு கொள்ள, நாசா தொடர்ந்து முயற்சித்து வந்தது. அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் தேதி, செவ்வாய் கிரக குன்றின் மீது பர்சீவரென்ஸ் ரோவர் […]

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர், தனது 52 வது பறக்கும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, செவ்வாய் கிரக மண்ணில் தரையிறங்கிய ஹெலிகாப்டரை, நாசாவால் மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பர்சீவரென்ஸ் ரோவர் மூலம், இன்ஜினியூட்டி ஹெலிகாப்டரை தொடர்பு கொள்ள, நாசா தொடர்ந்து முயற்சித்து வந்தது. அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் தேதி, செவ்வாய் கிரக குன்றின் மீது பர்சீவரென்ஸ் ரோவர் ஏறிய போது, இன்ஜென்யூனிட்டி ஹெலிகாப்டர் மீண்டும் கண்டறியப்பட்டு, அதனுடனான தொடர்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 63 நாட்களுக்கு பிறகு, இணைப்பு மீண்டும் கிடைத்துள்ளதால், நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu