செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த மினி ஹெலிகாப்டர் உடனான தொடர்பை நாசா இழந்தது. தற்போது தொடர்பு மீண்டும் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, இன்ஜினியூட்டி ரோவர் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் பறக்கும் முதல் கருவியாக இது அறிவிக்கப்பட்டது. சிறிய ஹெலிகாப்டர் போல இது செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை, இந்த ஹெலிகாப்டரின் 72 ஆவது பறக்கும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எதிர்பாராத முறையில், இன்ஜினியூட்டி ஹெலிகாப்டரின் பயன்பாடு நிறைவடைந்துவிட்டது எனவும், பல விஞ்ஞானிகளின் கடின உழைப்பு வீண் போனதாகவும் அஞ்சப்பட்டது. ஆனால், சனிக்கிழமை அன்று தொடர்பு மீட்டெடுக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.