நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமிக்கு சமீபமாக கடந்து சென்ற 2 விண்கற்களை கண்காணித்து வந்தனர். அவற்றில் ஒரு விண்கல் நிலவுடன் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
2024 MK மற்றும் 2011 UL21 ஆகிய விண்கற்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். அதில் 2011 UL21 என்று அழைக்கப்படும் விண்கல், கடந்த ஜூன் 27ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல், சுமார் 70 மீட்டர் அகலமானது. மேலும், கோள வடிவில் இருக்கும் இந்த விண்கல், தனியாக சிறிய நிலவு ஒன்றை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 1.9 மைல் தொலைவில் இந்த நிலவு விண்கல்லை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த தகவல் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.