கடந்த 2022 ஆம் ஆண்டு பூமியின் வெப்பநிலை 2015ஆம் ஆண்டுடன் ஒத்துப் போவதாகவும், இது 5வது வெப்பமான ஆண்டாக அறியப்படுவதாகவும் நாசா தெவித்துள்ளது. மேலும், 2022 ல், வெப்பநிலை உயர்வு 1.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. மேலும், மனித சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 19ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பத்தை விட 2022 ல் வெப்பம் உயர்வாகப் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 9 ஆண்டுகளில் பதிவாகியுள்ள வெப்பநிலை 1880 க்கு பின், தொடர்ந்து வரலாற்று உச்சமாகவே பதிவாகி வருகிறது. இதற்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணம் என்று கூறப்படுகிறது. அதிக அளவிலான பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுவதால் வெப்பநிலை உயர்ந்து வருவதாகவும், 2020 ஆம் ஆண்டு பொது முடக்கத்தின் போது சற்று குறைந்த கார்பன் வெளியேற்றம், 2022 ஆம் ஆண்டில் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.