உலக அளவில் வெப்பமான மற்றும் வறண்ட பகுதியாக அறியப்படுவது அமெரிக்காவின் டெத் வேலி ஆகும். இந்தப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சூறாவளி புயல் ஏற்பட்டபோது, ஏரி ஒன்று உருவானது. இது படிப்படியாக சுருங்கியது. ஆனால், அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக மீண்டும் விரிவடைந்துள்ளது. இந்த ஏரியின் புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது.
நாசாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஆகஸ்ட் மாத சூறாவளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய டெத் வேலி புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜூலை மாதம், ஆகஸ்ட் மாதம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட டெத் வேலி செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஏரி உருவாகியுள்ளதை காட்டுகின்றன. இந்த ஏரியின் பரப்பளவு அதன் பிறகு படிப்படியாக சுருங்கினாலும், அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக மீண்டும் ஆகஸ்ட் மாத நிலையை அடைந்துள்ளது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது. அதனை சுட்டிக்காட்டும் பிப்ரவரி மாத புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது.