விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்பட்ட செடியின் மலர் - நாசா புகைப்படம் பகிர்வு

சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஆய்வுக்காக பல்வேறு செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், மனிதர்கள் விண்வெளியில் மற்றும் வேற்று கிரகங்களில் வசிக்கும் வாய்ப்புகள் ஏற்படும் போது, அங்கு உணவு உற்பத்தியை மேற்கொள்ளும் விதத்தில், இந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில், நாசா சில பூச்செடிகளை பயிரிட்டது. குறிப்பாக, zinnia விதைகள் பயிரிடப்பட்டன. தற்போது, இந்தச் செடியில் பூ மலர்ந்திருப்பதை நாசா பகிர்ந்துள்ளது. நாசாவின் அதிகாரப்பூர்வ சமூக […]

சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஆய்வுக்காக பல்வேறு செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், மனிதர்கள் விண்வெளியில் மற்றும் வேற்று கிரகங்களில் வசிக்கும் வாய்ப்புகள் ஏற்படும் போது, அங்கு உணவு உற்பத்தியை மேற்கொள்ளும் விதத்தில், இந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில், நாசா சில பூச்செடிகளை பயிரிட்டது. குறிப்பாக, zinnia விதைகள் பயிரிடப்பட்டன. தற்போது, இந்தச் செடியில் பூ மலர்ந்திருப்பதை நாசா பகிர்ந்துள்ளது.

நாசாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், "இந்த மலர், பூமியின் சுற்றுவட்ட பாதையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மலர்ந்துள்ளது. விண்வெளியில், செடிகளை பயிர் செய்வது குறித்து 1970 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா விஞ்ஞானி Kjell Lindgren தொடங்கி வைத்த ஆராய்ச்சியின் பயனாக, இந்த மலர் உள்ளது. மேலும், எங்கள் ‘விண்வெளி தோட்டம்’ பூமியின் காட்சிக்கு வழங்கப்படுகிறது" என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu