வியாழன் கோள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஜூனோ என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அந்தக் கோளின் lo நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதுவரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே இது மிகவும் துல்லியமானதாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
ஜூபிடர் கோளின் மிக முக்கியமான நிலவு lo ஆகும். கடந்த பிப்ரவரி 3ம் தேதி, ஜூனோ விண்கலம் இந்த நிலவுக்கு நெருக்கமாக சென்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம், lo நிலவின் ஒரு பாதி சூரிய வெளிச்சத்தால் ஒளிர்வது போலவும், மற்றொரு பாதி அரை வெளிச்சத்துடன் இருப்பது போலவும் உள்ளது. இந்த அரை வெளிச்சம் வியாழன் கோளிலிருந்து கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். lo நிலவு எரிமலைகள் நிறைந்ததாகும். இந்த புகைப்படம் மூலம், நிலவைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிவது சாத்தியமாகியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.