வரும் அக்டோபர் மாதத்தில் வியாழன் கோளின் முக்கிய நிலவான யூரோப்பா நிலவுக்கு நாசா விண்கலத்தை அனுப்புகிறது. யூரோப்பா கிளிப்பர் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் முக்கோண வடிவிலான உலோக செய்தி பலகை ஒன்று எடுத்துச் செல்லப்படுகிறது.
வியாழன் கோளின் யூரோப்பா நிலவில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. மேலும், சில விஞ்ஞானிகள், அங்கு ஏற்கனவே உயிர்கள் தோன்றியிருக்கலாம் என கருதுகின்றனர். எனவே, இந்த திட்டம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தில் எடுத்துச் செல்லப்படும் உலோக செய்தி பலகையில், யூரோப்பா நிலவைப் போற்றி அமெரிக்க கவிஞர் லாரேட் அடா லிமன் எழுதிய கவிதை மற்றும் 26 லட்சம் மக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த நிலவில் தண்ணீர் உள்ளதை கண்டறிவதற்காகவே இந்த திட்டம் என்பதால், உலகின் 103 மொழிகளில் தண்ணீர் என பொருள் படும் வார்த்தைகள் அலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. இது தவிர தொலைத்தொடர்பு இணைப்பை ஏற்படுத்தக் கூடிய அலைவரிசை குறிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளன.