நாசாவின் துணையோடு இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி, நிலவில் நோவா சி என்ற லேண்டர் தரை இறக்கப்படுகிறது. இது, இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு மிக அருகில் தரையிறக்கப்படுகிறது.
நிலவின் தென் துருவப் பகுதியில் அமைந்துள்ள மாலாபேர்ட் ஏ கிரேட்டர் பகுதியில் நோவா சி லேண்டர் தரையிறக்கப்படுகிறது. இது சந்திரயான் 3 தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், நிலவின் தென் துருவப் புள்ளியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. நாசாவின் 5 சுமை பாகங்களும், ஒரு வர்த்தக சுமையும் நோவா சி லேண்டரில் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லேண்டர் மூலம், நிலவின் தென்துருவம் குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கப் பெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.