நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா ஒரியன் விண்கல சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா 2017 ஆம் ஆண்டு முதல் ஆர்திமிஸ் என திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் விண்கலன்களை தயாரித்து வருகின்றன. இந்தத் திட்டத்தை அமெரிக்காவில் நாசா ஆராய்ச்சி கழகம் கையில் எடுத்துள்ளது. இதற்கு உறுதுணையாக எலான் மஸ்கின் ஸ்பெக்ஸ் எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உட்பட உலக முன்னணி நிறுவனங்கள் உதவி வருகின்றன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்ப நாசா ஆர்திமிஸ் 2 என்ற திட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நான்கு பெண் விண்வெளி வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஒரியன் விண்கலம் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதனை விண்வெளி வீரர்கள் முதல் முறையாக நேரில் சென்று பார்த்தனர். இது வீரர்களை தங்கள் பணிகளை விரைவில் செய்து முடிக்க ஊக்கப்படுத்தும் என்பதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.