நாசா, விண்வெளியில் உள்ள கருந்துளையிலிருந்து எதிரொலிக்கும் ஒளிக்கற்றைகளை ஒலி வடிவமாக மாற்றி வெளியிட்டுள்ளது.
கருந்துளையிலிருந்து வெளியிடப்படும் ஒளி எதிரொலிகளை நம்மால் உணர முடியாது. எனவே, சோனிபிகேஷன் என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் ஒளியை ஒலியாக மாற்றி, நம்மால் உணர முடியும் வகையில், நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.
“கருந்துளைகள், ரேடியோ அலைகள் மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளை வெளியிடுவதில்லை. ஆனால், அவை, சுற்றி உள்ள பொருட்களில் மின்காந்த கதிர்வீச்சு வெடிப்புகளை ஏற்படுத்த வல்லன. அந்த வகையில், பூமியிலிருந்து 7800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, சூரியனை விட 5 முதல் 10 மடங்கு பெரிய கருந்துளை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது சுற்றியுள்ள நட்சத்திர கூட்டமைப்பு பொருட்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. இவ்வாறு நேரம் பொழுது, எக்ஸ்ரே போன்ற கதிர்வீச்சுகள் ஏற்படுகின்றன. சோனிபிகேஷன் தொழில்நுட்பம் மூலம், எக்ஸ்ரே கதிர், ஒலியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஒளியில் உள்ள பிரகாச தன்மைக்கு ஏற்ப ஒலி அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று நாசா பதிவிட்டுள்ளது.