8 மாதங்களுக்கு பிறகு 4 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

October 26, 2024

மார்ச் மாதம் விண்வெளிக்கு சென்ற 4 வீரர்கள், இன்று அதிகாலை மெக்சிகோ வளைகுடாவில் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு வந்தனர். நாசா, கடந்த மார்ச் மாதம், அமெரிக்க விண்வெளி வீரர்கள் மேத்யூ டாமினிக், மைக்கேல் பராட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 பேரை 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட்டின் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். ஆய்வு முடிந்து, இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு […]

மார்ச் மாதம் விண்வெளிக்கு சென்ற 4 வீரர்கள், இன்று அதிகாலை மெக்சிகோ வளைகுடாவில் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு வந்தனர்.

நாசா, கடந்த மார்ச் மாதம், அமெரிக்க விண்வெளி வீரர்கள் மேத்யூ டாமினிக், மைக்கேல் பராட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 பேரை 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட்டின் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். ஆய்வு முடிந்து, இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூமிக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், செப்டெம்பர் மாதம் விண்கலம் விண்வெளி வீரர்கள் இல்லாமல் பூமிக்கு வந்தது. மில்டன் புயல் காரணமாக, அவர்களின் பயணம் தாமதமாகியது.

இதற்கிடையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் 8 நாட்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் ஆய்வு 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில், 'ஸ்பேஸ் எக்ஸ்' 2 புதிய விண்வெளி வீரர்களை அனுப்பியது. மார்ச் மாதம் விண்வெளிக்கு சென்ற 4 வீரர்கள், இன்று அதிகாலை மெக்சிகோ வளைகுடாவில் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு வந்தனர். தற்போது 4 அமெரிக்கர்கள் மற்றும் 3 ரஷியர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu