மார்ஸ் ஹெலிகாப்டரில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட கடைசி செய்தி

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரை நாசா அனுப்பியிருந்தது. இந்த ஹெலிகாப்டர் தனது பறக்கும் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தியுள்ளது. இனிமேல் ஒரே இடத்தில் நிலையாக நின்று தகவல் சேகரிக்கும் பணிகளை மட்டும் மேற்கொள்ள உள்ளது. இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் தனது பறக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி உள்ளதை நாசா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், மார்ஸ் ஹெலிகாப்டரின் சாதனைகளை நினைவு கூறி உள்ளது. “மார்ஸ் ஹெலிகாப்டர் இதுவரை 72 முறை பறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 2 […]

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரை நாசா அனுப்பியிருந்தது. இந்த ஹெலிகாப்டர் தனது பறக்கும் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தியுள்ளது. இனிமேல் ஒரே இடத்தில் நிலையாக நின்று தகவல் சேகரிக்கும் பணிகளை மட்டும் மேற்கொள்ள உள்ளது.

இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் தனது பறக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி உள்ளதை நாசா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும், மார்ஸ் ஹெலிகாப்டரின் சாதனைகளை நினைவு கூறி உள்ளது. “மார்ஸ் ஹெலிகாப்டர் இதுவரை 72 முறை பறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் பறந்துள்ளது. இது அனுப்பிய தகவல்கள் மூலம் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது” என்று நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu