நெடுந்தொலைவில் உள்ள பிரமாண்ட கருந்துளை - ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில், நெடுந்தொலைவில் உள்ள பிரமாண்ட கருந்துளை ஒன்றை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. CEERS 1019 என்ற கேலக்ஸி குழுமத்தில் இந்த கருந்துளை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பெருவெடிப்பு நிகழ்ந்த 570 மில்லியன் ஆண்டுகளில் தோன்றியதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட கருத்துளைகளை விட இது மிகப்பெரிய அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. தொலைநோக்கியின் புகைப்படங்கள் மூலம் மேலும் இரு கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை, பெருவெடிப்பு நிகழ்ந்து 1 மற்றும் 1.1 பில்லியன் […]

பிரபஞ்சத்தில், நெடுந்தொலைவில் உள்ள பிரமாண்ட கருந்துளை ஒன்றை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.

CEERS 1019 என்ற கேலக்ஸி குழுமத்தில் இந்த கருந்துளை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பெருவெடிப்பு நிகழ்ந்த 570 மில்லியன் ஆண்டுகளில் தோன்றியதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட கருத்துளைகளை விட இது மிகப்பெரிய அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. தொலைநோக்கியின் புகைப்படங்கள் மூலம் மேலும் இரு கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை, பெருவெடிப்பு நிகழ்ந்து 1 மற்றும் 1.1 பில்லியன் ஆண்டுகளில் தோன்றியவை என கூறப்பட்டுள்ளது. கேலக்ஸிகள் ஒன்றிணைவதால் இத்தகைய கருந்துளை ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அதன் விளைவாகவே அதிக நட்சத்திர உருவாக்கத்தில் இந்த பிரமாண்ட கருந்துளை ஈடுபட்டு வரலாம் எனவும், விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இது குறித்த தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu