செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்சிஜன் உற்பத்தி - நாசாவின் மோக்சி பரிசோதனை வெற்றி

September 8, 2023

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் உடன் இணைந்து பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வடிவமைத்த சிறிய கருவி ஒன்று செவ்வாய் செவ்வாய் கிரகத்தில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ள அனுப்பப்பட்டது. இது, ஒரு மைக்ரோவேவ் அவன் அளவில் உள்ள கருவியாகும். மோக்சி (MOXIE - மார்ஸ் ஆக்சிஜன் இன்சைடு ரிசோர்ஸ் யுடிலைசேஷன் எக்ஸ்பெரிமெண்ட்) […]

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் உடன் இணைந்து பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வடிவமைத்த சிறிய கருவி ஒன்று செவ்வாய் செவ்வாய் கிரகத்தில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ள அனுப்பப்பட்டது. இது, ஒரு மைக்ரோவேவ் அவன் அளவில் உள்ள கருவியாகும். மோக்சி (MOXIE - மார்ஸ் ஆக்சிஜன் இன்சைடு ரிசோர்ஸ் யுடிலைசேஷன் எக்ஸ்பெரிமெண்ட்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி, 16வது முறையாக வெற்றிகரமாக ஆக்சிஜன் உற்பத்தியை நிறைவு செய்துள்ளது.
மோக்சி பரிசோதனை திட்டத்தின் படி, செவ்வாய் கிரகத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை ஆக்சிஜன் வாயுவாக மாற்ற வேண்டும். அதன்படி, எதிர்காலத்தில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை கொடியேற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். அந்த வகையில், இந்த பரிசோதனை மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu