தற்காலத்தில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனை காலநிலை மாற்றமாகும். காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை தீவிரமாக சேகரிக்க நாசாவின் பேஸ் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்கள் மூலம், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிமையாகும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கப்பல்களில் இருந்து வெளியேறும் சல்ஃபர், எரி பொருட்களை எரிப்பதால் கிளம்பும் புகை ஆகியவை பூமியின் வளிமண்டலத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அதுவே, எரிமலை வெடிப்புகளால் வெளிப்படும் சல்பர், வளிமண்டலத்தின் மேலடுக்கை அடைந்து சூரிய ஒளியை தடுக்கிறது. இது போன்ற தகவல்கள் பேஸ் செயற்கைக்கோள் மூலம் கிடைக்கிறது. இது எந்த அளவுக்கு வளிமண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கணினி மூலமாக ஆய்வு செய்யும் பட்சத்தில், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.