நமது பிரபஞ்சம் பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கியது. இந்த நிலையில், பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக ஒரு கோட்பாடு உள்ளது. இதனை நாசாவின் ஜேம்ஸ் வெப் மற்றும் ஹப்பிள் ஆகிய விண்வெளி தொலைநோக்கிகள் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, பிரபஞ்சம் குறித்த மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பிரபஞ்சம் விரிவடைந்து வரும் விகிதத்தை விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். தற்போது, ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கணிப்புகள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொலைநோக்கிகள் கொடுத்த தகவல்கள் விஞ்ஞானிகளை புதிரில் சிக்க வைத்துள்ளது. இதுவரை பின்பற்றப்பட்டு வந்த இயற்பியல் முறைகளை பொய்யாக்கும் விதமாக இந்த தகவல்கள் அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். எனினும், பிரபஞ்சம் விரிவடைந்து வரும் கோட்பாட்டை தொலைநோக்கி களில் இருந்து பெற்ற தகவல்கள் உறுதி செய்வதாக கூறியுள்ளனர்.