விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள வாயேஜர் 2 விண்கலத்துடனான இணைப்பை, நாசா தற்காலிகமாக இழந்துள்ளது.
மனிதனால் விண்வெளியில் நெடுந்தூரத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் வாயேஜர் 2 முக்கியமானது. தற்போது, இது பூமியிலிருந்து 12.3 பில்லியன் மைல் தொலைவில் பயணித்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 21ஆம் தேதி, நாசாவின் தொடர் தவறான கட்டளைகள் வாயேஜர் 2 ஆண்டனாவை பூமிக்கு எதிர் திசையில் திருப்பி உள்ளது. கிட்டத்தட்ட 2% அளவில் ஆண்டனா திசை மாற்றம் அடைந்துள்ளது. எனவே, வாயேஜர் 2 விண்கலத்துடன் உள்ள தொடர்பை நாசா இழந்துள்ளது. எனவே, விண்கலம் அனுப்பும் செய்திகள் பூமியை வந்தடையவில்லை. அதே வேளையில், பூமியிலிருந்து விண்கலத்துக்கு அனுப்பப்படும் கட்டளைகள் விண்கலத்தை சென்றடையவில்லை.
பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், வாயேஜர் 2 விண்கலத்தின் ஆண்டனா அமைப்பு பலமுறை மாற்றி அமைக்கப்படும். அதன்படி, அடுத்த ஆண்டனா மாற்றம் அக்டோபர் 15ஆம் தேதி திட்டமிடப் பட்டுள்ளது. எனவே, அன்றைய தினத்தில், வாயேஜர் 2 விண்கலம் மீண்டும் பூமியுடன் தொடர்பு கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.