ரஷ்ய இராணுவத்துடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் உக்ரைனின் நான்கு பகுதிகளை இணைத்த பின்னர், ரஷ்யபகுதிகளை பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக புடின் எச்சரித்திருந்தார். இதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்தது. அதையடுத்து குரூப் ஆஃப் செவன் (ஜி7) நாடுகள், உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது ரஷ்யாவுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சமீபத்தில் ஆற்றிய உரையின் போது உக்ரைனில் ரஷ்யாவின் போர் தீவிரம் குறித்து எச்சரிக்கை விடுத்து அணுசக்தி "ஆர்மகெடோன்" பற்றி பேசினார். அதன்விளைவாக புடின், அணு ஆயுத அச்சுறுத்தல்களை புதுப்பித்துள்ளார். மேலும் ரஷ்யாவுடன் உக்ரேனிய பிரதேசங்களை இணைத்துக்கொள்வதாக அறிவித்தார். இ௫ப்பினும் சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே தனது படையை வலுப்படுத்த 300,000 ராணுவ வீரர்களை புதிதாக இணைத்து படையை பலப்படுத்தினார். இந்நிலையில் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய புதின், ரஷ்ய இராணுவத்துடன் நேட்டோ மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.