ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு பகுதிகளாக பிரியத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டுக்கும் இடையே புதிய கடல் பகுதி உருவாகி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஒரு நில அடுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளாக பிரிவதை பிளவு என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இவ்வாறு, ஜாம்பியா மற்றும் உகாண்டா பகுதிகளில் பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதே போன்ற பிளவு காரணமாக, 13.8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகள் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, இன்னும் சில லட்சம் ஆண்டுகளில், ஆப்பிரிக்கா இரண்டு பகுதிகளாக பிரியும் என்று கருதப்படுகிறது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து பிரியும் சிறிய நிலப் பகுதியில், சோமாலியா, கென்யாவின் ஒரு பகுதி, எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகள் அடங்கி இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், எத்தியோப்பிய பாலைவனப் பகுதியில், நிலப் பிளவு பெரிதாகி வருகிறது. இப்பகுதியில், இயற்கை பேரழிவுகள் ஏதேனும் நேர்ந்தால் இந்த பிளவு வேகமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.