நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய தென் சென்னை மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வந்த நிலையில் மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடியில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் தென் சென்னை மக்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து நெடுஞ்சாலை துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த கோரிக்கையை ஏற்று நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்கு மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.