கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் மிகவும் மோசமான கடன் சுமையில் உள்ளது. எனவே, நிறுவனத்தின் திவால் நடவடிக்கையை தொடங்குமாறு, தாமாக முன் வந்து விண்ணப்பித்தது. கடந்த மே இரண்டாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிறுவனத்தின் விண்ணப்பம், தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, திவால் நடவடிக்கையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நடவடிக்கைக்கு மத்தியில், இடைக்கால அதிகாரியாக அபிலாஷ் லால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிறுவனத்தின் திவால் நடவடிக்கையில், எந்த ஒரு பணியாளரையும் நீக்க கூடாது என தேசிய நிறுவனங்கள் சட்ட அமைப்பு - NCLT உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில், வரும் மே 19ஆம் தேதி வரை, கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தனது அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.