போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே ஆன தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் திமுக அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் டெல்லியில் இருந்து போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாக போதைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தெரிய வந்ததால் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவருடன் நெருங்கிய தொடர்பில் இயக்குனர் அமீர் இருந்து வந்தார். இவருக்கும் ஜாபர் சாதிக்கும் எவ்வித தொடர்பு என்பது குறித்த விசாரணை டெல்லியில் இன்று நடைபெற்றது. அதன் அடிப்படையில் காலை 11:30 மணி முதல் இரவு 10.20 மணி வரை அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.