என்டிடிவி பங்குகள், 602 கோடிக்கு அதானி குழுமத்திடம் விற்பனை

December 31, 2022

என்டிடிவி நிறுவனர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர், தங்கள் வசம் இருந்த நிறுவனத்தின் பங்குகளை 602 கோடி ரூபாய்க்கு அதானி குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளனர். என்டிடிவி நிறுவனத்தின் 27.26% பங்குகள், பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் வசம் இருந்தன. அவற்றை, ஒரு பங்கு 342.65 ரூபாய்க்கு அதானி குழுமத்திடம் விற்பனை செய்துள்ளனர். மேலும், 17% பங்குகள், 294 ரூபாய்க்கு விற்கப்பட்டன. தற்போது, 110 கோடி ரூபாய் மதிப்புள்ள, என்டிடிவியின் 5% பங்குகள் மட்டுமே, […]

என்டிடிவி நிறுவனர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர், தங்கள் வசம் இருந்த நிறுவனத்தின் பங்குகளை 602 கோடி ரூபாய்க்கு அதானி குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

என்டிடிவி நிறுவனத்தின் 27.26% பங்குகள், பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் வசம் இருந்தன. அவற்றை, ஒரு பங்கு 342.65 ரூபாய்க்கு அதானி குழுமத்திடம் விற்பனை செய்துள்ளனர். மேலும், 17% பங்குகள், 294 ரூபாய்க்கு விற்கப்பட்டன. தற்போது, 110 கோடி ரூபாய் மதிப்புள்ள, என்டிடிவியின் 5% பங்குகள் மட்டுமே, இவர்கள் வசம் உள்ளன. மேலும், இதுவரையில், அதானி குழுமம், என்டிடிவியின் 64.72% பங்குகளை கையகப்படுத்தி உள்ளது.

என்டிடிவியின் உரிமையாளர் பதவிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. நிர்வாகப் பொறுப்புகளில் அமன் குமார் சிங் மற்றும் சுனில் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகக் குழுவில் இருந்து டாரிஸ் தரபோர்வால, கௌஷிக் தத்தா, இந்திராணி ராய், ஜான் மார்டின் ஆகியோர் விலக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu