இந்தியாவில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய மக்களிடையே அடுத்த பிரதமர் குறித்த கருத்து கணிப்பு கேட்கப்பட்டது. அந்த வகையில், ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 49% இந்திய மக்கள், நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில், இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவதற்கு, நரேந்திர மோடி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி ஆகியோரை இந்திய மக்கள் பதிவு செய்துள்ளனர். நரேந்திர மோடிக்கு 49%, ராகுல் காந்திக்கு 18%, யோகி ஆதித்யநாத்துக்கு 6%, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5%, மம்தா பானர்ஜிக்கு 2% ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், இந்திய குடிமக்களில் ஐந்தில் மூன்று பேர், நரேந்திர மோடி வலிமையான முடிவுகளை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.