பூமிக்கு மிக அருகில், சூரியனை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் கருந்துளை ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 1600 ஒளி ஆண்டுகள் தொலைவில், இந்த கருந்துளை அமைந்துள்ளது. மேலும், இது சூரியனை விட பூமிக்கு 3 மடங்கு நெருக்கமாக உள்ளது.
இந்த கருந்துளைக்கு, கையா பி ஹெச் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் இயக்கப்படும் கையா என்ற செயற்கைக்கோள் மூலம் இந்த கருந்துளை கண்டறியப்பட்டதால், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கருந்துளையை வட்டமிடும் துணை நட்சத்திரம் மூலம் இது அடையாளம் காணப்பட்டுள்ளது. பால் வீதியில் இந்த கருந்துளை அமைப்பு எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆராய்ச்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.